JJNEWSTAMIL LIVE

Live NEWS Live REPORTER

தேரூர் பேரூராட்சித் தலைவியாக மீண்டும் அதிமுகவை சேர்ந்த அமுதா ராணி பொறுப்பேற்றார்.

கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சித் தலைவியாக மீண்டும் அதிமுகவை சேர்ந்த அமுதா ராணி பொறுப்பேற்றார்.

கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி தலைவியாக அதிமுகவை சேர்ந்த அமுதா ராணி, பட்டியல் இனத்தைச் சார்ந்தவருக்கு தலைவர் பதவி ஒதுக்கியதாக மதுரை உயர்நீதிமன்றம் எடுக்கப்பட்ட உத்திவினால் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்மானித்தது. இதற்குப் பின்னர், டெல்லி உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றார். மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்காத நிலையில், அமுதா ராணி நேற்று தேரூர் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் பிற கவுன்சிலர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *